Sunday, September 15, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் - பீமசங்கரம்

“ டாகின்யாம் பீமசங்கரம் “  என்று ஜ்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் குறிப்பிடப்படும் பீமசங்கரம் என்ற ஸ்தலம் , மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சலாயாத்ரி மலைத் தொடரில் டாகினி மலைப் பகுதியில் இது உள்ளது. இங்குதான் பீமா நதி உற்பத்தி ஆகிறது. பின்னர் அந்நதி தென்கிழக்காக ஓடி சமவெளியை அடைந்து சந்திரபாகா எனவும் பெயர் பெற்றது. நிறைவாக அது ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியோடு கலக்கிறது. திருபுராதி அசுரர்களை சிவபெருமான் போரிட எழுந்தபோது அவரது திருமேனியின் வியர்வையில் பீமா நதி தோன்றியது என்கிறார்கள்.

தல வரலாறு: கும்பகர்ணனுக்கும் கற்கடி என்ற ராக்ஷசிக்கும் மகனாகப் பிறந்தவன் பீமாசுரன். தனது தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷனர் என்ற முனிவரும் , தந்தையான கும்பகர்ணனை இராமனும் கொன்று விட்டதாக அறிந்த பீமாசுரன், அரசர்களையும்,முனிவர்களையும், அந்தணர்களையும் அழிக்க வேண்டிக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக பிரமதேவனிடம் வரம் பெற்று, அரசர்களைத் துன்புறுத்தினான்.

காமரூப நாட்டு அரசனான ப்ரியதர்மனும் அவனது மனைவியான தட்சிணா தேவியும் சிறந்த சிவபக்தர்கள். அவ்விருவரையும் சிறைப்படுத்திய பீமாசுரன், அவ்வரசனது நாட்டை அபகரித்துக் கொண்டான். அரசனும் அரசியும் தாங்கள் செய்து வந்த நித்திய சிவபூஜையை சிறைச்சாலைக்குள் இருந்தபடியே செய்து வந்தனர். சிறைக்காவலன் மூலம் இதனை அறிந்த பீமாசுரன் நேராகச் சிறைக்குச் சென்று சிவபூஜையை நிறுத்திவிடவேண்டும் என்றும் தன்னை அரசனும் அரசியும் வணங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். இருவரும் அதற்கு மறுக்கவே, கோபங்கொண்ட பீமாசுரன் ஒரு வாளை அவர்கள் மீது வீசினான். அப்போது அவர்கள் பூஜித்த இலிங்கத்திலிருந்து இறைவன் வெளிப்பட்டு அசுரனை அழித்துத் தன் பக்தர்களைக் காப்பாறியருளினான் . அதுமுதல் இத்தலத்துப் பெருமானுக்குப் பீம சங்கரன் என்ற பெயர் ஏற்பட்டது. சூர்ய குலத்து அரசர் பீம் என்பவரின் பிரார்த்தனைக்கு இணங்கி சுவாமி இங்கேயே தங்கி விட்டதால் பீம் சங்கரர் என அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவதுண்டு.

கிராமவாசி ஒருவர் ஒருமரத்தை வெட்ட முற்படுகையில் அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு பதறிப் போனார். அப்போது ஊரார்கள் ஒரு பசுவை அம்மரத்தருகே கொண்டு வந்து நிறுத்தியபோது அப்பசு தானாகவே அங்கு பால் சொரிந்ததைக் கண்டு அவ்விடத்திலேயே கோயில் கட்டத் தீர்மானித்ததாகவும் கூறுவர். 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலை 18 ம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் என்ற பேஷ்வா திருப்பணி செய்தார். சத்ரபதி சிவாஜி இங்கு வந்து தரிசித்து விட்டுக் கோயிலுக்கு நிபந்தங்கள் அளித்ததாகவும் அறிகிறோம். ஞானேஸ்வர் என்ற மகான் த்ரயம்பகேச்வருக்கும் பீம சங்கரத்திற்கும் விஜயம் செய்துள்ளார். சின்மாஜியப்பா என்ற மன்னர் போர்த்துகீசியர்களை வென்று அவர்களிடமிருந்து ஒரு பெரிய மணியைக் கைப்பற்றி வந்து இந்த ஆலயத்திற்குக் காணிக்கையாக அளித்துள்ளார். சுமார் 500 கிலோ எடையுள்ள இம்மணியை இன்றும் நாம் காணலாம்.
கோயில் நாகர பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை தாழ்ந்த இடத்தில் உள்ளது. ஜ்யோதிர் லிங்கத்திலிருந்து நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. கோயிலுக்குப் பின்புறத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. நானாபதன் விஷ் என்பவரால் அது நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்

பழைமை வாய்ந்த இக்கோயிலைச் சுற்றிலும் 108 கோயில்களும் பல தீர்த்தங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வ தீர்த்தம், மோக்ஷ தீர்த்தம்,அக்ஷய தீர்த்தம், பீமா உட்க தீர்த்தம், அமிர்த தீர்த்தம், குப்த மகேச்வர தீர்த்தம், சக்தி விநாயக தீர்த்தம் ஆகியவை சில முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

சிரவண மாதத்திலும், மகா சிவராத்திரியன்றும், கார்த்திகை மாதத்திலும்  ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.ருத்ராபிஷேகம்,பஞ்சாம்ருத அபிஷேகம் ஆகியவை இந்த ஜ்யோதிர்லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.

இத்தலத்தைச் சுற்றி ஹனுமான் ஏரி , பீமா நதியின் உற்பத்தி ஸ்தானம், சாக்ஷி கணபதி கோயில், போகிரி கோட்டை ஆகியன உள்ளன. மேற்குத்  தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதியான இதனை வனவிலங்குகள் சரணாலயமாக அமைத்துள்ளார்கள். காட்டு அணில் ( Malabar Giant Squirrel)  இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் தங்கி அங்குள்ள பறவை இனங்களையும் மிருகங்களையும் காண்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலை ஏற்றம் ( Trekking) செய்பவர்களும் இவ்விடத்தை நாடி வருகின்றனர். இத்தகைய இயற்கை எழில் கொண்ட காட்டுப் பகுதியைக் கடந்தே பீம சங்கரத்தை அடைகிறோம். இயற்கையையும் இறைவனையும் ஒருசேரக் காணும் பாக்கியமும் பெறுகிறோம்.     

4 comments:

  1. Thank you dear Sekhar,
    I have had the pleasure of visiting Alandi during a visit to Pandharpur. Jnaneshwar, who is regarded very highly as a Nathyogi, Advaiti and Krishna Bhakta is also respected for seeing paramatma alike in Siva and Vishnu. His advaitais partly described as the tradition of considering Siva and Vishnu as exactly the same.

    ReplyDelete
    Replies
    1. I agree. I am reminded of Alwar's " Thaazh sadaiyum neel mudiyum" on Thirumalai endhai.

      Delete
  2. Everyone is born in a particular family tradition. Obvious to hold one's own tradition as highest and this is acceptable. This is part of self-esteem. But my esteem should not attempt to belittle somebody else's esteem.
    as divinity is a matte r of personal experience, comparisons and competitions or conflicts have little / limited scope. It all boils down to acceptance and thereby tolerance. Once we reach the peak or pinnacle, we shall see that there is no space for the second.

    ReplyDelete
  3. Aum Nama Sivaya Sivaya Nama AUM
    Very good presentaion
    One should dharsan this great sthalam in life time and be Blessed by Him

    ReplyDelete