Monday, March 18, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி

வெராவெல் ரயில் நிலையம். இங்கிருந்து ஸோம்நாத் சுமார் 5 கி.மீ.  

கி.பி. 731 – 738 கால கட்டத்தில் அரேபியப் படைகள் நுழைய முற்பட்டபோது, சாளுக்கிய அரசரான புலிகேசி அதனை முறியடித்து விரட்டினார். சௌராஷ்ட்ரத்தை வளைத்து உஜ்ஜைன் வரை வந்த படைகளை பிரதிஹரா வம்சத்தைச் சேர்ந்த நாகபட்டா என்ற மன்னர் விரட்டியடித்தார்.கி.பி.815ல் இரண்டாம் நாகபட்டா என்ற மன்னரது ஆட்சியில் கனோஜ் தலைநகர் ஆகியது. அப்போதுதான் மூன்றாவது முறையாக ஸோம நாத் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 1019 ல் போஜ ராஜன் காலத்தில் குஜராத் மிகுந்த வளர்ச்சி பெற்றது. சிவ பக்தரான போஜ ராஜா பல கோயில்களைக் கட்டினார்.

ஸோம்நாத்தில் நம்மை வரவேற்ற காளை 
கி.பி. 1000 ஆண்டில் மகமூத் என்பவன் பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு சிந்து வெளியைத் தாண்டிப்  போரிட வந்தான். அப்போது அவனது தந்தைக்கு ஜெயபால மன்னர் எழுதிய கடிதத்தை “The Glory that was Gujraradesha “ என்ற நூலிலிருந்து திரு. முன்ஷிஜி அவர்கள் பின்வருமாறு எடுத்துத் தருவதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படித்து உணர வேண்டும்:

You have heard of, and now know the heroism of the Indians. In difficulties, we fear neither death nor destruction. In affairs of honour and renown, we would woo the fire like roast meat, the dagger like the rays of the sun .”

பதினோரு ஆண்டுகள் கழித்து மகமூத் மீண்டும் படை எடுத்து வந்து, ஜெயபால மன்னரைத் தோற்கடித்தான். மன்னரும்,தனது மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தீப் பாய்ந்தார். திரு முன்ஷி அவர்கள், : the conquest of India is the conquest of culture “ என்று குறிப்பிடுகிறார். கி.பி. 1022 வரை மகமூதின் படைகள் மும்முறை தாக்கின. இதற்குப் பின் தான் வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் துவங்கியது.

கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாவது நாள், சோம்நாத்தைப் பொருத்தவரை ஒரு கருப்பு தினம். கஜினி முகமதின் படைகள் அன்றுதான் ஸோமனாத் மீது தாக்குதல் நிகழ்த்தின. 8 ம்  தேதியன்று பயங்கரப் போர் மூண்டது. ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது சுமார் ஐம்பதினாயிரம் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையைக் கைப்பற்றிய கஜினி முகமது நேராக ஆலயத்திற்குள் சென்று சிறு பகுதிகளாக ஸோமநாத மூல லிங்கத்தை உடைத்தெறிந்தான். சிவந்த கற்களால் அருமையாகக் கட்டப்பட்டிருந்த இந்த மூன்றாவது ஆலயம் தீக்கு இரையாக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் கஜினி முகமது அங்கு தங்காமல் கஜினிக்கே திரும்பி விட்டான். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே ஸோம்நாத் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. எதற்காக இக்கோயிலையே குறி வைத்தார்கள் என்றால் இந்துக்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக வரலாற்றைக் கடந்து இந்தக்கோயில் திகழ்ந்ததுதான் ! 

ஐந்தாவது முறையாக இக்கோயில் கட்டப்பட்டபோது கோட்டைச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டன. அரசர்கள் தரிசிக்கும் இடம் கட்டப்பட்டது. உறுதியான தூண்களைக் கொண்ட மண்டபம் ஸோமநாதர் சன்னதிக்கு முன்னர் நிறுவப்பட்டது. வேதம் ஒதுபவர்களுக்கென்று வீடுகள் கட்டித்தரப்பட்டன. த்ரிபுராந்தகா என்ற பாசுபத ஆச்சார்யார் காலத்தில் பல கோயில்கள் கட்டப்பெற்று பிரபாஸ் சீரும் சிறப்புமாக விளங்கியது.

கி.பி. 1292 ல் அல்லாவுதீன் கில்ஜி டெல்லி சுல்தான் ஆனதும் மீண்டும் பிரபாஸ் அழிவுக்கு ஆளாகியது. ராஜபுத்திரப்படைகள் எவ்வளவோ போரிட்டும் அரேபிய படைகளை வெல்ல முடியவில்லை. ஆலப் கான் என்பவன் கோயிலுக்குள் நுழைந்து சிவ லிங்க மூர்த்தியை சிதைத்து விட்டு அதன் துண்டுகளை டெல்லிக்கு எடுத்துச் சென்றான்.

1 comment:

  1. Venkatesan KS - Just like undertaking pilgrimage to Kasi and Rameswaram all Hindus should at least once in the6life time visit Somanatham and remember the sacrifices made by our Kings, soldiers, religious scholars and even ordinary people of Hindu religion. We should establish museums at such Temple towns destroyed by invaders and marauders

    ReplyDelete